திருவனந்தபுரம், ஜுலை 18- நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறைகேடுகள் வழக்கின் சான்றுகள் அழிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்தக்கோரி நிர்வாக சீர்திருத்த ஆணை யத்தின் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் திருவனந்தபுரம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு மனு சமர்ப்பித்துள்ளார். மைக்ரோ பைனான்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.கே.மகேசனின் மர்மமான மரணத்தை அடுத்து இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்று மனுவில் கவலை தெரி விக்கப்பட்டுள்ளது. மகேசனின் நெருங்கிய உறவினர்கள் மைக்ரோ பைனான்ஸ் திட்டத்து டன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மகேஷின் நெருங்கிய உறவினர்களான சுபாஷ் வாசு உள்ளிட்டவர்களிடமிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். விசா ரணை நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வை யில் நடக்க வேண்டும். விசாரணையின் முன்னேற்றத்தின் நிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
எஸ்என்டிபி பொதுச் செயலாளர் வெள்ளாப்பள்ளி நடேசன், தலைவர் டாக்டர். எம்.என்.தாமஸ், பின்தங்கிய சமூக மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் திலீப் குமார், கே.கே.மஹேசன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு 2016 முதல் விஜிலென்ஸ் நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது. இந்த வழக்கின் மனுதாரர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆவார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வெள்ளாப்பள்ளி நடேசன் உயர்நீதி மன்றத்தை அணுகியிருந்தார். நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது மட்டு மல்லாது மைக்ரோ பைனான்ஸ் மோசடி குறித்து ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.