tamilnadu

பிராமணனே உயர்ந்தவன் என்பதற்கு எதிராகவும், மனுஸ்மிருதிக்கு எதிராகவும் இயங்கியவர் ஸ்ரீநாராயணகுரு

புதுதில்லி, ஜூன் 27 - பிராமணனே உயர்ந்தவன் என்பதற்கு எதிராகவும், மனுஸ்மிரு திக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழு தும் இயங்கியவர் ஸ்ரீநாராயண குரு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. திங்க ளன்று மாலை மக்களவையில் தமது முதல் பேச்சைத் துவக்கிய ஏ.எம்.  ஆரிப் பேசியதாவது: குடியரசுத் தலைவர் உரையில், ஸ்ரீநாராயணகுரு உட்பட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சில அறிஞர் பெருமக்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதற்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ நாராயணகுரு கேரள சமூகத்தில் நிலவிவந்த சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக சீர்திருத்த இயக்கத் தை மேற்கொண்டவர். ஸ்ரீ நாராயண குரு குறித்து ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர், பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற  கொள்கைக்கு எதிரானவர். மனுஸ்மிருதி என்னும் தத்துவத்திற்கு எதிரானவர்.

மக்களை உண்மையான பிரச்சனை களிலிருந்து திசைதிருப்புவதில் நீங்கள் (பாஜக) வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நாட்டு மக்கள் அனைவரும் நீங்கள் கடந்த ஐந்தாண்டு காலமாகக் கடைப்பிடித்து வந்த மக்கள் விரோதக் கொள்கைகளை மறந்துவிட்டார்கள் என்று இதற்குப் பொருள் அல்ல.    விவசாயிகளின் போராட்டங்களைத் திசைதிருப்புவதற்காக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் ஒன்றை அறிவித்து அதற்கு இதுவரை 13 ஆயிரம் கோடி ரூபாய் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் செலவு செய்திருப்பதாகவும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோன்று பணமதிப்பு நீக்கம் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட  துன்ப துயரங்களிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்கு உங்களுக்கு புல்வாமா துயர நிகழ்வு உதவி  இருக்கிறது. இவ்வாறு மக்களின்  நாட்டுப்பற்று எனும் உணர்வை உங்கள் கட்சியின் வெற்றிக்கு உபயோகப் படுத்திக் கொண்டுவிட்டீர்கள். உங்களின் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்னும் சிந்தனை ஒட்டுமொத்தமாக கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒன்று, ஜனநாயக விரோதமான ஒன்று. இது தொடர்பாக எமது கட்சி ஏற்கனவே ஒரு குறிப்பை அரசுக்கு அளித்திருக்கிறது. இந்நாட்டில் குடி யரசுத் தலைவர் ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கான முதல் அடியா கும் இது. மாநிலங்களின் உரிமைகளில் கை வைக்கும் விஷயமாகும் இது. எனவே, இதனைக் கைவிட வேண்டும்.

பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது குறித்து குடியரசுத் தலைவர் உரை எதுவுமே கூறவில்லை. பெட்ரோலியப் பொருட் களின் உயர்வுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தேர்தல் சமயங்களில் மட்டும் அவை உயராமல்  அப்படியே நிலைத்து நிற்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதி லிருந்தே, ஆள்வோரின் கை  இதில் இருக்கிறது என்பது தெளிவாகும்.   நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து என்ன நடவடிக்கை  எடுத்திருக்கிறீர்கள்? இதுபற்றி குடி யரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லை. உயர்கல்வியைப் பொறுத்த வரை இனிவருங்காலங்களில் சாமா னிய மக்களின் பிள்ளைகள் எவரும் உயர்கல்வி நிலையங்களுக்குப் போக முடியாத நிலையை உரு வாக்கி இருக்கிறீர்கள். மேலும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இன்னமும் பரிதாபகரமான நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முத்தலாக் சட்டம் என்பது சட்ட விரோதமான ஒன்று என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று.

அடுத்து நாட்டின் பாரம்பரியத் தொழில்களான மீன்வளம், கயிறு திரித்தல், கைத்தறித் தொழில்களில் கோடிக்கணக்கான மக்கள் ஈடுபட்டி ருக்கிறார்கள். அவர்கள் குறித்தெல் லாம் குடியரசுத் தலைவர் உரை எதுவுமே கூறவில்லை. அவர்கள் பெறும் ஊதியம் மிகவும் சொற்பம். பல்வேறு சிரமங்களுடன் வாழும் மீனவர்கள் நலன் குறித்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி மக்க ளுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றது. ஆனால் இதுவரை அவர் களுக்கு நல்ல காலம் பிறக்கவில்லை. நிறைவாக ஸ்ரீ நாராயணகுரு போத னை ஒன்றைக் கூறி என் உரையை முடிக்கிறேன். ‘மதம் எதுவாக இருந்தா லும் மனிதன் நன்றாக வாழ வேண் டும்’ என்பதே அந்த போதனையாகும். எனவே அந்தத் திசைவழியில் நீங்கள் செயல்பட வேண்டும். உங்களு டைய இந்துத்வா மனு(அ)நீதிக்  கலாச்சாரத்தை மக்கள் மீது திணிக்கா தீர்கள். நானும், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களும், நம் தேசிய கீதத்தில் கூறியிருப்பதைப் போன்று, வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள்.இவ்வாறு ஆரிப் பேசினார்.    (ந.நி.)