கேரளா நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் நீலாம்பூர் பகுதியில் கனமழையால் தண்ணீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. குறிச்சியார் மலா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியல் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இடுக்கி மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளில் வரும் 11 ம் தேதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் இடுக்கி ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியை துரிதப்படுத்தும்படி வனம் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.