தஞ்சாவூர், ஜன.25- தஞ்சாவூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சனிக்கிழமை பல்லாயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் திர ண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியரகம் நோக்கி சனிக்கிழமை ஊர்வல மாகப் புறப்பட்டனர். ஆட்சியர கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு அனுமதி வழங்கப்படாத தால், இவர்களை காவல்துறை யினர் தடுத்து நிறுத்தினர். இதை யடுத்து மேல வஸ்தா சாவடி ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட் டம் நடத்தினர். இதில், குடி யுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதி ராகத் தமிழகச் சட்டப்பேரவை யில் தீர்மானம் நிறைவேற்ற வலி யுறுத்தியும் முழக்கங்கள் எழுப் பப்பட்டன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித் தார். மாநிலத் துணைத் தலைவர் ப.அப்துல் ரகுமான் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் ஜமா அத் உள்பட பல்வேறு இஸ்லா மிய அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கல ந்து கொண்டனர். வடக்கு மாவட்டச் செயலர் முகமது பாரூக் நன்றி கூறினார்.