மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காட்டேரி ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, வரதராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.