காஞ்சிபுரம், நவ.13- நத்தப்பேட்டை ஏரியி லிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ஏரி பொதுப்பணித்துறையினால் பராமரிக்கப்பட்டு வரு கின்றது. இந்த ஏரியை நம்பி தான் விவசாயிகள் விவ சாயம் செய்துள்ளனர். மேலும் பல ஏக்கரில் விவசா யம் செய்திட உழவுப்பணி யினை தற்போது விவசாயி கள் மேற்கொண்டுவரு கின்றனர். இந்நிலையில் ஏரியிலி ருந்து தண்ணீர் திறக்கப்ப டாததாலும், தற்போது மழை பெய்யாததாலும் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் நிலையிலும், நாற்றங்காலிற்காக உழவு செய்யப்பட்ட விவசாய நிலங்களும் காய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி பெருநகர செயலா ளர் சி.சங்கர் கூறியதாவது:- கடந்த மாதத்தில் பெய்த மழையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில ஏரிகள் முழு கொள்ளவை எட்டி யுள்ளது. இதில் நத்தப்பேட்டை ஏரியும் ஒன்று. இதன் உபரி நீரால் அருகில் உள்ள வையாவூர் ஏரியும் நிறைந்துள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் மழையை நம்பி விவசாயப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது தண்ணீர் இல்லா ததால், விவசாய வேலை களை பாதியிலேயே நிறுத்தி யுள்ளனர். எனவே உடனடியாக நத்தப்பேட்டை ஏரி நீரை மதகுகள் மூலம் விவசாய பயன்பாட்டிற்கு திறந்துவிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.