tamilnadu

சென்னை, காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

65 பதக்கங்களை வென்று மாணவர்கள் சாதனை
சென்னை, செப்.3 சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் பெங்களூ ருவில் அண்மையில் நடைபெற்ற, தேசிய அளவிலான சமையல் கலைப் போட்டியில் 39 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.  அதோடு, தலைநகர் டில்லியில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான உணவு அலங்காரக் கலை தேசியப் போட்டியிலும் 8 பதக்கங்களை வென்றனர். இது மட்டுமின்றி, மலேசிய நாட்டின் மெலாகா நகரில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான சமையல் கலைப் போட்டியிலும் 2 பதக்கங்களையும், அண்மையில் நொய்டாவில் நடைபெற்ற இந்தியா இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டாலிட்டி எக்ஸ்போ 2019ல் 16 பதக்கங்களை கைப்பற்றினர். இந்தப் போட்டிகள் அனைத்திலும் முன்னணி ஹோட்டல்களைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும், பிரபல சமையல் கலை பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

கல்குவாரியில் வெடி விபத்து
காஞ்சிபுரம், செப்.3-  காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியில் குண்ண வாக்கம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை வெட்டி உடைப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை குடோனில் வைத்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று (செப்.3) வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தன.  விபத்து பற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விபத்தில் ஒருவர்  பலி
மாமல்லபுரம், செப்.3-  திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆயப்பாக்கம் கிரா மத்தை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (5). கொத்தனாரான இவர் கிளாப்பாக்கத்தில் உள்ள தந்தையை பார்த்து விட்டு, இருசக்கர வாகன த்தில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். இவர் புதுப்பட்டி னம் சாலை, தாங்கல் நகர் வளைவில் வந்த போது எதிரே வந்த மணல் லாரி திடீரென இரு சக்கர வாகன த்தில் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எம்.ஜி.ஆர். இறந்தார்.