காஞ்சிபுரம், ஜூன் 2- விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழனன்று (ஜூன் 1) துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதுகுறித்து பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகை யில், தேசத்தில் பல்வேறு விதமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட் டுள்ள விவசாயிகளின் நிலை குறித்து கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விவசாயிகள் சங்க சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. விவசாயத் தொழிலை பாதிக்கும் விதமான கொள்கைகள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயி களை காப்பதற்கு மோடி ஆட்சியில் எந்த நிவாரண திட்டங்களும் இல்லை.
தில்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்தக் கூட்டம் ஆதரவு தெரிவித்துக் கொள்கி றது. குற்றவாளி பிரிஜ் பூசணை கைது செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஐக்கிய விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து வரும் 5ஆம் தேதி அவரது கொடும்பாவி எரிக்கும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பரந்தூர், நெய் வேலி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லா மல் விவசாய நிலங்களை கையகப் படுத்தக் கூடாது என்பது விவசாயி கள் சங்கத்தின் தீர்மானமாகும். விவசாய நிலங்களை கையகப் படுத்துவதற்கு பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்த போதும், சட்ட விதிகளை ஏற்காமல் தான்தோன்றித்தனமாக நிலத்தை கையகப்படுத்துவது தவறான செயலாகும். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, மக்களின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஏற்கெனவே விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். விவசாயிகளுக்கு எதிராக அடக்கு முறை நடைபெறுகிறது. நெய்வேலியின் 2ஆவது சுரங்கம் அமைப்பதற்கு ஒரு சில விவசாயிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். 3ஆவது சுரங்கத்தை அமைக்க விவசாயிகள் சங்கம் அனுமதிக்காது. தமிழ் நாடு, கேரளா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ரப்பர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு களில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுவதால் விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே, செப்டம் பர் 14ஆம் தேதி ரப்பர் இறக்கு மதியை தடுக்கவும், விலை நிர்ண யம் செய்யவும் வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
கார்ப்பரேட்டுகளே வெளியேறு
ஜூன் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாட்டிலுள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள் இல்லங்களை நோக்கி பேரணியாக சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் 15ஆம் தேதி வரை, கார்ப்பரேட்டுகளை புறக்கணிக்கும் வகையில் இயக்கங்கள் நடைபெற உள்ளது. ஐக்கிய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில், ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு வெள்ளையனே வெளி யேறு இயக்கம் போல், கார்ப்பரேட்டு களே வெளியேறு என்ற இயக்கத்தை நடத்த உள்ளோம் என்றார்.
மணிப்பூர் வன்முறை
மணிப்பூர் நீதிமன்றத்தின் தவறான ஓர் உத்தரவு காரணமாக மணிப்பூர் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் மாநில அரசு மற்றும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். அங்கு வன்முறை, வெறியாட்டம், படுகொலை நடந்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்தி, வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திரிபுரா ஆதரவு தினம்
2022 மின்சார திருத்த சட்டத்தி னால் மின்விநியோகம் தனியார் வசம் போகும். இதனால் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். திரிபுரா தேர்தலுக்குப் பிறகு, இடதுசாரி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தி யுள்ளனர். மேலும் அவர்களது வீடு, கடைகள், விளை நிலங்கள், ரப்பர் மரம் ஆகியவை தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. இடதுசாரிகளுக்கு பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற் காக ஜூன் 20ஆம் தேதி இந்தியா முழுவதும் திரிபுரா ஆதரவு தினம் நடைபெற உள்ளது. மேகதாது அணை குறித்து ஏற்கெனவே நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு நடக்க வேண்டும்.
ஆரூரான் சர்க்கரை ஆலையில் கடந்த 185 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்ற னர். அவர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் மோசடியாக பெற்றுள்ள கடன்களை ரத்து செய்து விவசாயி களை விடுவிக்க வேண்டும் என்றும் பெ.சண்முகம் கூறினார். இச்சந்திப்பின் போது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, துணைத் தலைவர் ஹன்னன் முல்லா, பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், நிதிச்செயலாளர் கிருஷ்ணபிரசாத், துணைச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.