காஞ்சிபுரம்,செப். 30 காஞ்சிபுரம் மாவட்ட த்தில் இயங்கும் கல்குவாரி களில் கனிமவளங்களை வெட்டுவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடை பெறுவதாகவும், அரசு அலுவலர்கள் கல்குவாரி களின் ஒப்பந்தார்களாக செயல்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் லாரிகளில் கொண்டு செல்லப்படும் ஜல்லிகளுக்கு இடமற்று சான்றிதழ் இல்லையென மடக்கி காவல்துறையினர் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போடுகின்றனர். எம்சாண்ட் மணலுக்கு மட்டும் இடமற்று சான்றிதழ் வழங்கினால் போதும் என்பது ஆட்சியரின் ஆணை யாகும். லாரிகள் நேரடியாகச் சென்று ஜல்லியை அள்ளி, லாரிகளில் ஏற்றி விற்பனை செய்ய இயலாது. லாரி களில் ரூ.20,000 மதிப்புள்ள ஜல்லியை ஏற்றி வருகிறோம், எங்கள் மீது தொடந்து வழக்குபோடப்படுகிறது. இதற்காக விசாரணை எனத் தினசரி அல்லல்பட வேண்டியுள்ளது, ஆனால் அரசு அனுமதி என்ற பெயரில் விதிமுறைக ளுக்கு முரணாக செயல்படும் கிரஷர் உரிமையாளர்கள் தான் முதல் குற்றவாளி. இவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை, காவல்துறையின் செயல்பாடு சட்டத்திற்கு முரணான செயலாகும். இது குறித்து ஆளுநர், தமிழக முதல்வர், கனிமவள உயர் அலுவலர்கள் என அனை வருக்கும் மனு வழங்கி யும் எவ்வித மேல் நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை . இதனால் லாரித் தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறோம். ஒரு காலத்தில் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர்கள் தற்போது கல்குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக மாறிவிட்டனர். காவல் துறை பாதுகாப்பு கொடுத்தால் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து உரிய ஆவணங்களை வெளியிடத் தயாராக இருக்கி றோம் என்றார் அவர்.