tamilnadu

3 ஆண்டுகளாக மரம் வெட்டும் வேலை செய்த 18 கொத்தடிமைகள் மீட்பு

திருப்பெரும்புதூர், ஆக.31-  குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் இந்திரா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் மணி (60). இவர் மரம் காண்டி ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார்.  மரம் வெட்டுவதற்காக வந்தவாசி, மதுராந்தகம் பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குறைவான கூலி கொடுத்து கொத்தடிமைகளாக நடத்துவதாக செல்போன் மூலம் அரசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதை தொடர்ந்து திருப்பெரும்புதூர் தாசில்தார் காஞ்சனமாலா, துணை தாசில்தார் பூபாலன், வருவாய் ஆய்வாளர் சந்திர சேகர், கிராம நிர்வாக அலுவ லர் விமலா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தி னர். அப்போது காண்டி ராக்டர் மணியின் வீட்டின் அருகே கொட்டகை போடப்பட்டிருந்தது. அதில் அதிக அளவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தை கள் தங்க வைக்கப்பட்டி ருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அனை வரும் அங்கு கொத்தடிமை களாக அடைத்து வைக்கப்ப ட்டிருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அங்கு இருந்த 18 பேர் மீட்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கொடுத்து அழைத்து வந்து மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் கிடை யாது. சாப்பாடு மட்டும் வழங்கியுள்ளனர். வேலை முடிந்ததும் மணி வீட்டின் அருகேயுள்ள கொட்டகை யில் அடைத்து வைக்க ப்பட்டு வந்தனர். தப்பிச் செல்லாமல் இருக்க கொட்ட கையை சுற்றி அடியாட்களை நிறுத்தி கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.  வந்தவாசி காலவிடு கிராமத்தை சேர்ந்த வெங்க டேசனின் மனைவி சினேகா என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர்களை காண்டி ராக்டர் மணி 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட 18 பேரும் சோமங்கலம் காவல்நிலை யத்தில் ஒப்படைக்கப்பட்டு ள்ளனர். மேலும், காண்டிராக்டர் மணியிடம் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர்.