காஞ்சிபுரம், அக்.24- காஞ்சிபுரம் மாவட்ட த்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக நடை பெற்ற வருகிறது. காஞ்சி புரம் நகராட்சி ஆணையர் கே.மகேந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் சுகாதார த்துறையினர் காஞ்சிபு ரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சி புரம் ஓரிக்கை பகுதியில் பழைய இரும்பு பொருட்களை விற்கும் கடை யில் ஆய்வு மேற்கொண்ட னர். அங்கு 4 டன் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அதனை அங்கிருந்து அகற்ற உத்தர விடப்பட்டது. இதையடுத்து அதன் உரிமையாளர் பலரா மன் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்நிலையில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி இரும்பு கடை உரிமையாளர் பலராமனுக்கு நகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி கேமிரா, ஊராட்சி செய லர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் வடகரை ஆகிய ஊராட்சி களில் டெங்கு கொசுக்கள் உருவாக்கும் இடங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது பெரிய தெருவில் உள்ள தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் டெங்கு காய்ச்சலை உரு வாக்கும் புழுக்கள் கண்டறி யப்பட்டது. இதையடுத்து அந்த கம்பெனிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.