அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஆக. 19) காஞ்சிபுரம் பேருந்து நிலைய பணிமனை முன்பு துணைத் தலைவர் இ.கோவலன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சம்மேளன மாநில துணைத் தலைவர் கே.பி.அன்பழகன்,துணைத் தலைவர் பி. ரமேஷ், துணை பொதுச் செயலாளர்கள் வி. சிவலிங்கம், எஸ். மாயக்கண்ணன், இணைச் செயலாளர் வி. நாராயணன், பொதுச் செயலாளர் என். நந்தகோபால், சாலை போக்குவரத்து மாவட்டத் தலைவர் மதுசூதனன், இணைச் செயலாளர் பி. சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.