tamilnadu

img

மழைநீர் சேகரிப்போம், மரம் வளர்ப்போம்’ என்று விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆர்.கே.எஸ் கல்லூரி சார்பில் உலகங்காத்தான் கிராமத்தில் ‘மழைநீர் சேகரிப்போம், மரம் வளர்ப்போம்’ என்று விழிப்புணர்வு பேரணி கல்லூரி செயலாளர் என்.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.இமெல்டா குளோடின்குயின் பேரணியை துவங்கி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பேரணியில் கல்லூரி முதல்வர் ஜி ஜெயசீலன், துணை முதல்வர் கு.மோகனசுந்தர் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.