கரூர், ஜூலை 16- கரூர் மாவட்டம் குளித்தலை நகரத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி வீட்டு மனைகளாக உருவாக்க ப்பட்ட போது பூங்கா அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் நகராட்சி நிர்வாகம் உரம் தயாரிக்கும் நுண் உரக்கிடங்கை அமை த்துள்ளது. இந்த உரம் தயாரிக்கும் நுண் உரக்கி டங்கில் குளித்தலை நகரத்திலுள்ள அனை த்து குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. குப்பைகள் அதிகளவில் உள்ளதால் துர்நா ற்றம் வீசுவதுடன், விஷ பூச்சிகள் குடியி ருப்பது அதிக அளவில் உள்ளது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக இந்த உரக்கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டு மென குளித்தலை நகராட்சி நிர்வாகத்திடம் பொ துமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் வழ ங்கியும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவ டிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து குளித்தலை பகுதி மாண வர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.முத்து ச்செல்வம் தலைமையில் பெரியார் நகர் பகுதி மக்கள் மாரியம்மன் கோவிலிலிருந்து பாய், அடுப்பு, சிலிண்டர், சமையல் பாத்திரங்களு டன் ஊர்வலமாக, நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த வந்தனர். பொதுமக்களை நகராட்சி நிர்வாகம் அலு வலகத்திற்குள் அனுமதிக்காமல் அலுவலக கேட்டை இழுத்து மூடிவிட்டனர். இதனை யடுத்து பொதுமக்கள் போராட்டம் செய்த னர். குளித்தலை காவல் துறையினர் தலைமை யில் நகராட்சி ஆணையருடன் சுமூக பேச்சு வார்த்தை நடத்தியதில் 15 நாட்களுக்குள் குப்பை கிடங்கை இடம் மாற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஜூலை 24 அன்று மீண்டும் குடியேறும் போராட்டம் நட த்தப்படும் என கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் இரா.முத்துச்செல்வன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.