கரூர், ஜூலை 29- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் மனைவி குஞ்சிதம் சுப்பிரமணியன் பணி நிறைவு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் சிஐடியு சங்க அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.25 ஆயிரத்தை சுப்பிரமணியம் குடும்பத்தி னர் வழங்கினர். கடந்த மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலி யர்கள் போராட்டம் நடந்த போது போராட்டத்தை வாழ்த்தச் சென்ற கார ணத்துக்காக அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.சுப்பிரமணி யத்தை மருத்துவ நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இன்றுவரை அந்த பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட வில்லை. இந்தப் பின்னணியிலும் கூட அவருடைய குடும்பம் சி.ஐ.டியு.வின் அகில இந்திய மாநாட்டிற்கு நிதி அளித்தது அனைவராலும் பாராட் டப்பட்டது.