நாகர்கோவில், ஜூன் 20- விதிமுறைகளை மீறி வெளி மாவட்டத்தினரை தங்க வைத்த விடுதிக்கு நாகர்கோவில் மாநக ராட்சி அதிகாரிகள் சீல் வைத்த னர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோவிட் 19 தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 84 பேர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ளி யன்று இரவு நாகர்கோவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சென்னையில் இருந்து காரில் வந்த இரண்டு நபர்கள் வரு வாய்த்துறை அதிகாரிகள் சிபாரி சின் பேரில் தங்கவைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனியார் விடுதிகளில் யாரையும் தங்க வைக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் இந்த உத்தரவை மீறி வரு வாய் துறை அதிகாரிகளின் பரிந்து ரையின் பேரில் அவர்கள் தங்க வைக்கப்பட்ட தகவல் காவல் துறையினருக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து காவல் துறையினர் அங்கு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மற்றும் சென்னையிலிருந்து வந்த 2 பேர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு அறையில் தங்கி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சனியன்று நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறி வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டதால் அந்த விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.