tamilnadu

img

அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் போராட்டம்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் பில், மெடிக்கல் அலவன்ஸ் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.ராஜூ, என்சிசிபிஎ மாவட்டச் செயலாளர் இராஜநாயகம் பேசினர்.