நாகர்கோவில், பிப்.23- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சலேட்நகர் பகுதியை சேர்ந்த வர் இன்ஃபன்ட் விஜூ. கப்பலில் பணி யாற்றும் இவர் சனியன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு குடும்பத்தி னருடன் சென்றுள்ளார். பின்னர் ஞாயிறன்று காலை வீடு திரும்பி வீட்டில் சென்ற போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப் பட்டு திறந்த நிலையில் காணப்பட்டது. மேலும் அறையில் இருந்த பீரோ கதவு கள் திறக்கப்பட்டு அதில் இருந்த 25சவரன் நகைகளும் கொள்ளை போயிருந்தது.