tamilnadu

img

ஆட்சியர் காரை முற்றுகையிட்டு வருவாய்த்துறையினர் போராட்டம்

கடலூர், செப். 28- கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணி யாற்றும் துணை வட்டாட்சி யர் உள்பட பல்வேறு பணி நிலைகளில் உள்ள சிலர் கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், 4 பேர் தேர்தல் துணை வட்டாட்சியர்களாவர்.  இவர்கள், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் செய்த செலவினத்திற்கான பட்டியல் தயாரித்து சமர்பிக்கும் முன்பே இட மாறுதல் செய்யப்பட்டுள்ள னர். இதனால், தேர்தல் செலவுகளை அவர்களால் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்பட்டதாம். எனவே, அவர்களை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், தேர்தலுக்கான செலவினங்களை உடனடி யாக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலை  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் கார்களை வெளியே எடுக்க முடியாத அளவிற்கு அதன் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை சந்தித்த ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்,  மாவட்ட வருவாய் அலு வலரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துமாறு கூறினார். ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஆட்சியர், துணை ஆட்சியர் காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மீண்டும் காரை மறித்து முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணி யில் இருந்த காவல்துறையி னர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து சென்றார்.