கடலூர்,அக்.3- சாம்சங் தொழிலாளர் பிரச்சனை யில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் வலியுறுத்தி யுள்ளது.
சிஐடியு மாநில நிர்வாகக்குழு கூட்டம் கடலூர் தேவனாம்பட்டினத்தில் அக்டோபர் 3, 4, 5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் கே. ஹேமலதா உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகு மாறன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில உதவி பொதுச் செய லாளர்கள் வி.குமார், கே.திருச் செல்வம், எஸ்.கண்ணன் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாம்சங் தொழிலாளர்கள் நான்கா வது வாரமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தொழிலாளர்களின் கோரிக்கை களான, சாம்சங் இந்தியா தொழி லாளர் சங்கத்தை தமிழ்நாடு தொழி லாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
தொழிற்சங்கம் முன் வைத்திருக்கும் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனம் சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இந்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு தொழிலாளர் துறை இதுவரை கடைப்பிடித்த தொழிற்சங்க பதிவு நடவடிக்கையை போல் விண்ணப்பித்து 100 நாட்களுக்கு மேலாகிவிட்ட சாம்சங் தொழிலாளர் சங்கத்தை தாமதம் இன்றி பதிவு செய்து சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தையை தொழிலாளர் துறையில் நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் தலையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கைகளுக்காக அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக முழுவதும் இடதுசாரிகள் கட்சிகள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சங்கத்தினர் திரளாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.