தேசிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கையில் பதாகைகள் ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆகாஷ், லெனின் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.