tamilnadu

சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள் தண்டனை...

கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள கோ.பவழங்குடியைச் சேர்ந்தவர் ெஜயராமன் மகன் அய்யாகண்ணு (27). இவர் கடந்த 25.12.2018 அன்று 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அய்யாகண்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நீதிமன்றத்தில் (போஸ்கோ) நடைபெற்று வந்தது.நீதிபதி எழிலரசி இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யாகண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டதாக வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் கலைச்செல்வி கூறினார்.

;