tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 6- நூறுநாள் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் அதிகாரிகள் நடத்திய  பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. விருத்தாசலம் வட்டத்தில் நூறு நாள்  வேலை பல கிராமங்களில் வழங்கப்பட வில்லை. வேலை கேட்டு மே மாதம் 12ஆம்  தேதி அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வேலை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து சி.பி.எம். சார்பில், விருத்தாசலம் வட்டம் கோ.பொன்னேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வட்டச்  செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வன், கிளைச் செயலாளர் வி. லட்சுமி, வி.தொ.ச வட்டத் தலைவர் ராஜா, வட்ட துனைத் தலைவர் பி.வீரமணி, சிஐடியு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலை வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பயனாளிகளுக்கும் வரு கின்ற வியாழக்கிழமையிலிருந்து (ஜூலை 9) வேலை வழங்குவதாக உறுதியளித்தனர்.