சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் தற்காப்புக் கலைகள் கற்ற மாணவர்களுக்கு பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் ரூபியாள்ராணி, தற்காப்புக் கலை பயிற்சியாளர் அந்தோணிராஜ் மாணவர்களின் தகுதிக்கேற்ப ஊதா,சிவப்பு, நீலம், மஞ்சள் நிற பெல்டுகளை வழங்கினர்.பயிற்சியாளர்கள் சக்திவேல், அருள், வெங்கடேசன், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பயிற்சியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.