சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜன 23-27 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி பி.ராமமூர்த்தி நினைவுதினமான ஞாயிறன்று (டிச.15) கடலூர் நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வுகளில் சிஐடியு மாவட்டச்செயலாளர் பி.கருப்பையன் நிர்வாகிகள் வி.சுப்புராயன் ஏ.பாபு, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.