தீயாய் வேலைபார்க்கும் கர்நாடக பாஜகவினர்
பெங்களூரு, நவ.23- கர்நாடக மாநிலத்தில் 15 சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தல், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, இந்த இடைத்தேர் தல் வருவதற்கு யார் காரணமோ? அவர்களையே பாஜக தங்கள் கட்சி யில் சேர்த்துக் கொண்டு, வேட்பாளர் களாக அறிவித்திருப்பது, அந்தக் கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, அத்தானி, கோகாக் தொகுதிகளில், அதிகாரப்பூர்வ பாஜக வேட்பாளர்களை தோற்கடித்தே தீரு வோம் என்று அங்குள்ள பாஜக-வினர் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். அத்தானி தொகுதியில் கர்நாடக அரசின் துணைமுதல்வர் லட்சுமண் சாவடி போட்டியிட இருந்த நிலையில், புதிதாக கட்சிக்கு வந்த மகேஷ் கும தல்லி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இதேபோல கோகோக் தொகுதியில் அசோக் புஜார் போட்டி யிடுவார் என்று பாஜக-வினர் எதிர் பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, தகுதிநீக்க எம்எல்ஏ-வான ரமேஷ் ஜாரிகிகோலி வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, லட்சுமண் சாவடி மற்றும் அசோக் புஜாரின் ஆதரவா ளர்கள், அதிகாரப்பூர்வ பாஜக வேட்பா ளர்களுக்கு எதிராக அந்தந்த தொகுதி களில் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். பிரதமர் மோடியையும், முதல்வர் எடியூரப்பாவையும் நேற்று வரை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று பாஜக வேட்பாளர்கள் என்றால், அவர்களை நாங்கள் ஏற்க முடியாது; அவர்களுக்கு ஆதரவாக வேலை பார்க்க மாட்டோம் என்றும் அறிவித் துள்ளனர்.