tamilnadu

img

மதிய உணவிற்காக அரசு வழங்கிய உதவித்தொகையை அபகரித்த தந்தை - புகார் அளித்த 11 வயது சிறுமி

 ஒடிசாவில் மதிய உணவிற்காக அரசு வழங்கிய உதவித்தொகையை தந்தை அபகரித்துக்கொண்டதாக 11 வயது சிறுமி புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஒரிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள டுகுகா கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சங்கீதா சேத்தி. சேத்தியின் தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை மறுமணம் செய்துள்ளார். இதையடுத்து சேத்தி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஒடிசா மாநில அரசு மதிய உணவிற்காக அரிசி மற்றும் பணத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில் சேத்திக்கு வழங்கப்பட்ட பணத்தை அவரது தந்தை அபகரித்துள்ளார். இதைத்தொடர்ந்து சங்கீதா சேத்தி 10கி.மீ நடந்து சென்று  கேத்திரபாரா ஆட்சியரிடம் தன் தந்தை மீது புகார் அளித்துள்ளார். 
இதுகுறித்து கேந்திரபாரா ஆட்சியர் சமர்த் வர்மா கூறுகையில், சேத்திக்கு உரிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் பணத்தையும் அரிசியையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.