tamilnadu

கொடநாடு கொலை வழக்கில் ஜாமீன் தரக்கூடாது: காவல்துறை

சென்னை,ஆக.28- கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிறையில் உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை ஜாமீனில் விடு விக்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து இருவரையும் ஜாமீனில்  விடுவிக்க சென்னை உயர்நீதிமன் றம் மறுத்துவிட்டது. மறைந்த முதல்வர் ஜெய லலிதாவிற்கு சொந்தமான கொட நாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த  2017 ஆம் ஆண்டு உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடு பட்டது. இந்த சம்பவம் தொடர்  பாக வழக்குப்பதிவு செய்த  கோத்தகிரி காவல் நிலையத்தி னர் சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட  நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகி யோர் ஏற்கனவே ஜாமீன் பெற்ற னர். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர் மேத்யூ சாமுவேல் உடன்  சேர்ந்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேட்டியளித்து கலவ ரத்தை தூண்டுகிறார் என காவல்  துறை தெரிவித்து ஜாமீனை ரத்து செய்ய வைத்து, மீண்டும் இரு வரையும் சிறையில் அடைத்தது. மீண்டும் ஜாமீன் கோரி தாக்கல்  செய்த மனுக்கள் கீழ்மை நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்  தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள  இவர்களை ஜாமீனில் விடுவித் தால் அரசுத் தரப்பின் மற்ற சாட்சி களையும் மிரட்டக் கூடும் எனவும் தெரிவித்தார். தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த  வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாகவும் 3 மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுமில்லை என வாதிட்டார். சயான், மனோஜ் தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வாதங்  களையும் கேட்ட நீதிபதி ஆர் சுப்பிர மணியன்  இருவரையும் ஜாமீனில்  விடுவிக்க மறுத்து மனுக்களை  தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளார்.