சென்னை,டிச.24- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டா லின், காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவு முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 பேரை நேரில் ஆஜராகும்படி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்ட மும், ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது.
சென்னை அண்ணா சாலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரு நாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவா ஹிருல்லா, விடுதலைச் சிறுத் தைகள் தலைவர் திருமாவள வன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட் டம் நடத்தியதாக திருவல்லிக் கேணி காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத் தின்கீழ் அனுமதியின்றி கூடு தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவு களிலும், நுகர்வோர் பாது காப்புச் சட்ட பிரிவிலும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டா லின், திருநாவுக்கரசர்,தொல். திருமாவளவன், ஜவாஹி ருல்லா, காதர்மொய்தீன், கராத்தே தியாகராஜன் உள் ளிட்ட 7 பேருக்கு 26 ஆம் தேதி நேரில் ஆஜராகக்கோரி சம்மன் அனுப்ப நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.