tamilnadu

img

கொரோனா வைரஸ் இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய இறப்புகள்

கொரோனா தடுப்பூசிக்காக , இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனம் , மாடர்னா இன்க் மற்றும் அமெரிக்க தேசிய நிறுவனம் மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனம் ஆகியவற்றை மத்திய அரசு கவனித்து வருவதாக மூத்த அரசாங்க அதிகாரிகள்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில்  தலைமை தாங்கும் வல்லுநர்கள் குழு ஆகஸ்ட் 17 ஆம் தேதி சில மருந்து நிறுவனங்களின் தலைவர்களுடன் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 உலக சுகாதார அமைப்பு (WHO) ,இரண்டு-மூன்று வாரங்களுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த நிகழ்வுகளில் ஒரு அதிவேக மாற்றத்தின் அடிப்படையில் தொற்றுநோயைப் பற்றிய ஆரம்ப பகுப்பாய்வை  கண்டறிந்ததுள்ளது.

அதன் அடிப்படையில் பல நாடுகள் கோவிட்-19 பாதிப்பு படிப்படியாக உயர்ந்துள்ளன, ஒரு குறிப்பிட்ட உச்சநிலையைக் கண்டறிவது கடினம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கும் கோரோனா பரவும் முறைகள் வேறுபடுகின்றன."ஒவ்வொறு நாட்டிலும்  நோய்த்தொற்று மற்றும்   நோய் பரவும் முறைகள் நாங்கள் கவனித்து வருகிறோம்" என்று ஆப்பிரிக்காவின் WHO பிராந்திய இயக்குனர் மாட்சிடிசோ மொயெட்டி கூறினார்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவில் 58,096 புதிய கோவிட் -19 பாதிப்பு பதிவாகியுள்ளன, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,648,353 ஆக உள்ளது .அதில் மொத்த இறப்புகள் இதுவரை 51,059 ஆக உயர்ந்துள்ளன, கொரோனா சிகிச்சையில்  676,571 பேர் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில்,அதின் பாதிப்பு இந்தியாவிலும் அதிகமாக உள்ளது .கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்  இறப்புகளும் அதிகரித்து வருவது நமது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்பது நிதர்சனமான உண்மை.