கொடநாடு கொலை சம்பவம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட விவகாரத்தில் நஷ்டஈடு கோரிய முதல்வரின் வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன், வாலையாறுமனோஜ் ஆகியோர் அளித்த பேட்டிகளின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள தொடர்பு குறித்து தெகல்கா பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தனது பெயரை களங்கப்படும் நோக்குடன் பொய் குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதாக கூறி மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஜிபின், ஷிஜா அணில், ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக 1.10 கோடி நஷ்ட ஈடுகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து ஏழு பேரும் முதலமைச்சரை பற்றி பேசவும் எழுதவும் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மேத்யூ சாமுவேல் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மேத்யூ சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் மேத்யூ சாமுவேல் வரும் செப்டம்பர் 23ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.