tamilnadu

img

ஊர் இரண்டுபட்டால் அமெரிக்காவுக்குக் கொண்டாட்டம்!

“நாம் அளித்த ராணுவ ஆதரவுக் காக லிபியாவின் கலகக்காரர்கள் 50 சதவிகித எண்ணெய்யை நமக்குத் தந்திருக்க வேண்டும்” ஆகஸ்டு 21, 2011 ஆம் தேதியன்று தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அனுப்பிய டுவிட்டர் செய்திதான் இது.  லிபியாவின் கலகக்காரர்களுக்கு ஆதரவு தந்து முகமது கடாபி தலைமை யிலான அரசைக் கவிழ்க்க அமெரிக்கா தந்த ஆதரவைத்தான் அவர் குறிப்பிடு கிறார். லிபியாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கப் பெரு நிறுவ னங்களுக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்தாகும். மேற்கு ஆசியா மற்றும் தென் அமெ ரிக்காவில் அமெரிக்காவின் தலையீடு கள் அதிகரித்துள்ள வேளையில், தலையீட்டுக்கான நோக்கம் என்ன என்பதை டிரம்பின் டுவிட்டர் அம்ப லப்படுத்துகிறது. 

கடாபியை அகற்றிய பிறகு, லிபியா இரண்டு தேர்தல்களைச் சந்தித்தி ருக்கிறது. பிரதமர் பயஸ் அல் சர்ராஜ் தலைமையிலான அரசு தலைநகர் திரி போலியில் இருந்து இயங்குகிறது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தபிறகு, தற்போதைய அரசுக்கெதிராக ஒரு கலகக்குழு பலமடைந்துள்ளது. இதற்கு ஹப்தர் தலைமையேற்றி ருக்கிறார். லிபியாவின் கிழக்குப்பகு தியில் இந்தக்குழு நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் தனது படைகளை திரிபோலிக்கு வெளியே நிறுத்தி தாக்குதல்களைத் தொடர்ந்திருக்கிறது.  உலக அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து உற்றுக் கவனித்து வருப வர்களுக்கு ஆச்சரியமளிக்காத ஒன்று நடந்துள்ளது. தலைநகர் திரிபோலி யின் கதவுகளைக் குண்டுகளைக் கொண்டு தட்டிக் கொண்டிருக்கும் ஹப்தரின் கலகக்குழுவுக்கு அமெ ரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இத்த னைக்கும் திரிபோலியில் அமைந் துள்ள பயஸ் அல் சர்ராஜ் தலைமை யிலான அரசு ஐக்கிய நாடுகள் சபை யால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இருந்தாலும், எண்ணெய் வளத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க கல கக்குழுவுக்கு ஆதரவு தருவதே சரி யாக இருக்கும் என்று அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. ஊர் இரண்டு பட்டிருப்பதை அமெரிக்கா கொண் டாடுகிறது.

போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படுவதை அமெரிக்கா தடுத்தி ருக்கிறது. அமெரிக்காவின் வெளியுற வுத்துறை லிபியாவின் உள்நாட்டுப் போரைக் கண்டித்திருந்தது. ஆனால் போர் நிறுத்தத்திற்கு டொனால்டு டிரம்பின் நிர்வாகம் ஒப்புதல் தர வில்லை. போர் நடப்பதைத்தான் டிரம்ப் விரும்புகிறார். தற்போதுள்ள இரட்டை ஆட்சி முடிவுக்கு வந்து ஹப்தர் தலைமையில் ஆட்சி ஏற்பட்டால் அந்த நிர்வாகம் தமது கைவசமே இருக்கும் என்று அமெ ரிக்கா கணக்குப் போடுகிறது. தனது ஆசை என்ன என்பதை 2011 ஆம் ஆண்டே டிரம்ப் தனது டுவிட்டர் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். 

தடையற்ற உற்பத்தி

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் லிபியாவின் எண்ணெய் வளத்தை எடுப்பதில் சுணக்கம் எதுவும் இல்லை. அதோடு, 2023 ஆம் ஆண்டுக் குள் ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் எடுக்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டி ருக்கிறது. உள்நாட்டுச் சண்டையின் முடிவு எப்படி இருந்தாலும் அது தனக்குச் சாதகமாக இருக்கும் வகை யில் அமெரிக்கா கவனமாக இருக்கி றது. இரு தரப்புக்கும் ஆயுதங்களை விநியோகிக்கவும் அமெரிக்கா தயங்காது என்பதுதான் கடந்தகால அனுபவமாக இருக்கிறது.  2011 ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை “புரட்சி” என்று மேற்கத்திய நாடுகள் சொன்னாலும், லிபியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. கடாபியின் மறைவு குறித்து லிபிய மக்கள் கவலை தெரிவிக்கத் துவங்கி யுள்ளனர். இதை மேற்கத்திய ஊட கங்கள் அலட்சியப்படுத்துகின்றன. லிபியாவின் ஜனாதிபதியாக இருந்த  கடாபி “தியாகியா” அல்லது “வில்லனா” என்பதை வரலாற்றாய்வாளர்கள் முடிவு செய்ய இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம் என்ற நைஜீரியாவிலிருந்து வெளியாகும் லீடர்ஷிப் என்ற நாளிதழ் கருத்துத் தெரிவித்துள்ளது.  அதற்குள் அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் லிபியாவின் இயற்கை வளத்தைக் பெரும் அளவில் கொள்ளை அடித்திருக்கும். இதை லிபிய மக்கள் அனுமதிப்பார்களா??