tamilnadu

img

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறுக சிபிஎம், சிபிஐ ஆர்ப்பாட்டம்

ஈரோடு,டிச. 21- குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்தியாவை மத ரீதியாக பிளவுப்ப டுத்தும் குடியுரிமை சட்டத்தை அனு மதிக்க முடியாது. இஸ்லாமிய மக்களுக் கும், இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரி மையை மறுக்கக் கூடாது. இந்தியாவை மத வெறி நாடாக மாற்ற முயல்வது நிறுத்தப் பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத் திற்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத் தத்தை திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப் பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர செயலாளர் பி.சுந்தரராஜன் தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. மாரிமுத்து, சிபிஐ மாவட்ட செயலாளர் கே. ஆர்.திருநாவுக்கரசு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துளசிமணி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். முடிவில், சிபிஐ வட்டார செயலாளர் டி.சோமசுந்தரம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட செயற்க் குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து  கொண்ட னர்.