tamilnadu

img

மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில எடுப்பு விசாரணை விவசாயிகள் போராட்டத்தால் முறியடிப்பு

ஈரோடு, அக். 28 – மொடக்குறிச்சி வட்டாட்சி யர் அலுவலகத்தில் ஐடிபி எல் நிறுவனத்திற்காக நடத்தப் பட்ட நில எடுப்பு விசார ணையை விவசாயிகள் கிளர்ச்சி  செய்து முறியடித்தனர். இது பற்றிய விபரம் வரு மாறு: பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் திட்ட அதிகாரம் பெற்ற அதிகாரி புஷ்பா, ஐடி பிஎல் திட்ட மேலாளர் உமா ராணி ஆகியோர் கடந்த செவ்வாயன்று (அக்.27)  இரண்டு பெண்களிடம் ரகசிய மாக நில எடுப்பு விசாரணை நடத்தி கையெ ழுத்துப் பெற்றுள்ளனர்.  இதையறிந்த நூற் றுக்கணக்கான விவசாயிகள் புதனன்று  மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத் தில் குடும்பத்துடன் திரண்டனர்.  மேலும்,  இதுகுறித்து அறிந்த ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியும் அங்கு வந்து விவசாயிகளுடன் தரையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்பின், மாவட்ட ஆட்சியரை, கணேசமூர்த்தி எம்.பி.,  தொலைபேசியில் தொடர்பு கொண்டு செப்.15 ஒப்பந்தத்தை மீறி விசாரணை நடத்துவது சரியல்ல என கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதன்பின் அனைத்து பொறுப்பாளர்களோடு வட் டாட்சியர் அலுவலகத்திற்குள் சென்று  வட்டாட்சியர் முன்னிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரி புஷ்பாவிடம் “நீங்கள் நடத் தும் விசாரணை கோட்டாட்சியரும், நானும்  விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறு தியை மீறும் நடவடிக்கை, எனவே ரத்து  செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித் தார். அத்தோடு பிஎம்பி சட்டம் விவசாயிக ளுக்கு புரியும்படி தமிழில் கொடுங்கள் அதைப்படித்து விட்டு விவசாயிகள் கருத்துச்  சொல்லட்டும். தனியார் கார்ப்ரேட் நிறுவ னப் பிரதிநிதி விவசாயிகளை விசார ணைக்கு அழைப்பது ஜனநாயக மரபுப்புடி விவசாயிகளை இழிவுபடுத்துவதாகும். எனவே விசாரணையை ரத்து செய்து அறி விப்பு வெளியிட வேண்டும், என எம்.பி. கணேசமூர்த்தி வலியுறுத்தினார். ஆனால் ஐடிபிஎல் அதிகாரி புஷ்பா மழுப்பலாக பதில் கூறினார். இதையடுத்து வட்டாட்சியர் அறை  நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து  “அதிகாரம் பெற்ற அதிகாரி விசாரணையை  ரத்து செய்யாமல் வெளியே போக அனு மதிக்க மாட்டோம்” என விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, மேற்படி விசாரணையை ரத்து  செய்வதாக அறிவித்தனர்.  இதனை விவசா யிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதன்பின் அருகிலுள்ள திருமண மண்டப கூட்ட அரங்கில் நடந்த விளக்கக் கூட்டத்தில் அனைத்து அமைப்பினரும் உரையாற்றினர். இறுதியாகப் பேசிய அ.கணேசமூர்த்தி காங்கயத்தில் நவம்பர் 6ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ள விசாரணையையும் விவசாயிகள் திரண்டு நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத் தார்.

அவரது வழிகாட்டலைக் கூட்ட மைப்பு நிறைவேற்றும் என்று ஒருங்கி ணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி விவசாயிகள் மத்தியில் அறிவித்தார். முன்னதாக, இப்போராட்டத்தின்போது மதிமுக ஒன்றியச் செயலாளர் கோபால், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மக்கள்ராஜன், முன் னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, திமுக  மாநில நிர்வாகிகளில் ஒருவரான சச்சிதா னந்தம், மொடக்குறிச்சி (கிழக்கு) ஒன்றியச்  செயலாளர் வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் பூபதி, கொமதேக பிரகாஷ், புரட்சிகர இளை ஞர் முன்னணி பிரபு, கூட்டமைப்பு நிர்வாகி கள் ஏ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னை யன், திருப்பூர் ஆர்.குமார், நாமக்கல் பெரு மாள், காடச்சநல்லூர் செல்லமுத்து, சங்க கிரி இராஜேந்திரன், பவானி கவின் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.