கோபி, செப்.4- கோபிசெட்டிபாளையத்தில் செயல் படும் வேளாண்மை அறிவியல் நிலையத் தின் சார்பில் நீர் வள மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான உழவர் விழாவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் நீர் வள மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் உழவர் விழா நடைபெற்றது. இவ் விழாவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் வேளாண்மை அறிவி யல் நிலையதலைமை விஞ்ஞானிகள், அலுவலர்கள், வேளாண்மைத்துறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவிகள், விவசாயிகள் என ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா அரங்கில் அமைக் கபட்டிருந்த விவசாயம் சார்ந்த அங்காடி களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விளக்கங்கள் கேட்டறிந்தார்.