ஈரோடு, மே 4-பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள குளத்துபாளையத்தைச் சேர்ந்தவர் ராமு(32). ஆட்டோ ஓட்டுனரான இவர் பள்ளி மாணவ, மாணவிகளை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவரும் 8 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர் வந்ததையடுத்து அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து ராமுவிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.