ஈரோடு, நவ. 24- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும், போதை கலாச்சாரத்திற்கு எதி ராகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 400 கி.மீ நடைபயணம் மேற் கொள்ளவுள்ளனர். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பல்வேறு வடிவங் களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றது. ஆனால் தேசிய குற்றப்பிரிவு காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015 ஆம் ஆண்டைவிட 2017 ஆண்டு தமிழகத்தில் வன்முறைகள் குறைந்திருப்ப தாக கூறுகின்றது. பல்வேறு வன்முறை வழக்குகளில் காவல்துறை புகாரை பெற் றாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு வைப் பதற்கே போராடவேண்டியுள்ளது. காதலிக்க மறுத்தால் படுகொலை, காதலித்தால் ஆணவப் படுகொலை, குழந் தைகளின் மீதான பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், சைபர் கிரைம் குற்றங்கள் என பல லட்சம் வழக்குகள் நீதி மன்றங்களில் தேங்கி கிடக்கின்றன. ஆனாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களையே இழிவாக பார்க்கும் அவல நிலை தொடர்கிறது. இத்தகைய கருத்தியலை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் ,பெண்ணுரிமை அமைப்புகள் மட்டும் போராடினால் போதாது. ஒட்டு மொத்த சமூகமும் இத்தகைய பெண்ணடி மைத்தனத்திற்கு எதிராக போராட வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இத்தகைய பெண் அடிமைத்தனத்துக்கு எதிராகவும், பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் நவம்பர் 25 சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத் தன்று மாதர் சங்கம் சார்பில் இரண்டு முனைகளிலிருந்து 400கி.மீ நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த நடைபயணத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து செல்லும் மாதர் சங்கத்தினரை சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், ஆர்.கோமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சகாதேவன், எம்.அண்ணாதுரை உள்ளிட்டோர் வழி யனுப்பி வைத்தனர்.