tamilnadu

img

பரமகுடி அருகே சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு

பரமகுடி அருகே பழங்காலத்தைச் சேர்ந்த  சுடுமண் உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பு விழுந்தான் கிராமத்தில் ராக்கப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பகுதியில் பூமிநாதன் மற்றும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் சிவகுமார், இளைஞர்களுடன்  இணைந்து பரமக்குடியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் ஆய்வுப் பணியில் திங்களன்று ஈடுபட்டார். 
அப்போது அங்கு குழி ஒன்று தோண்டுகையில் பழங்கால சுடுமண் உறைகிணறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் வேலைப்பாடுகள் மிக்க மண்பாண்டங்கள், மண் ஓடுகள், பழங்கால மக்களின் எலும்புகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.