சென்னை,ஆக.4- தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியி ருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி. நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“ பல தலைமுறைகளாக இந்து சமய அறநிலைய கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்களுக்கு அற நிலையத்துறை சட்டப்பிரிவு 34-ன் படி நியாயமான விலையை தீர்மானித்து பயனாளிகளிடமிருந்து கிரயத் தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு இடங்களை சொந்தமாக்க வேண்டும், 2001ஆம் ஆண்டி லிருந்து சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு பலநூறு மடங்கு வாடகையை நிர்ணயித்து அதை முன் தேதியிட்டு ஒரே தவணையில் கட்ட நிர்பந்தப்படு த்தும் நிலையை கைவிட வேண்டும்” என்றார். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான ஆண்டிற்கு ரூ.6000 தொகையை கோவில், மடம் நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என்றும் கூறினார். வாடகை மற்றும் குத்தகையை பல மடங்கு உயர்த்தி ஒரே தவணை யில் கட்டத் தவறியவர்களை சட்டப்பிரிவு 78,79 ஐ பயன்படுத்தி ஆக்கிரப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.