tamilnadu

img

நெய்வேலியில் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம்

கடலூர்,மே 14- நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மூவாயிரத் திற்கும் மேற்பட்ட  வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதிய அனல் மின் நிலைய கட்டிட பணிக்கு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் என்எல்சி நிர்வாகம்  அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

உணவும், இருக்க இடமும் கிடைக்காமல் இரண்டு மாத காலமாக அவதிக்குள்ளான வட மாநிலத் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது வேறு வழியின்றி சொந்த  மாநிலத்திற்கு நடந்தே செல்வது என்று முடிவு செய்தனர். அதன்படி நெய்வேலியிலிருந்து புறப்பட்டனர். ஒட்டுமொத்தமாக தொழிலாளர்கள் கூறப்பட்டதை அறிந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நெய்வேலி பாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் அந்த தொழிலாளர்களை சமாதானப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து படிப்படியாக சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.