சென்னை,பிப்.10- டி.என்.பி.எஸ்.சி. வழக்கில் சிக்கி யுள்ள முக்கிய குற்றவாளி ஜெயக்கு மார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதன் மூலம் அவர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்துள் ளது. டி.என்.பி.எஸ்.சி, குரூப்-4, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிசி ஐடி காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் தலைமையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தினமும் குற்றவாளிகளின் கைது பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை டி.என். பி.எஸ்.சி. ஊழியர்கள் ஓம் காந்தன், மாணிக்கவேலு, காவலர்கள் சித் தாண்டி, முத்துக்குமார், பூபதி உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த வழக்கில் மூளை யாக செயல்பட்ட முக்கிய குற்ற வாளியான இடைத்தரகர் ஜெயக் குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் சரணடைந்தார். ஜெயக்குமார், சித்தாண்டி, ஓம் காந்தன் ஆகிய 3 பேரையும் காவலில் வைத்து சிபிசி ஐடி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி தனிப்படை காவலர்கள் ராமநாத புரம், சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முறை கேடு நடந்த கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய தேர்வு மையங்களுக்கும் இவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களை தனியார் பார்சல் வேனில் ஏற்றிவரும் போது நடுவழியில் நிறுத்தி தங்களுக்கு வேண்டிய தேர்வர்களின் விடைத் தாள்களை மட்டும் தனியாக எடுத்து, பின்னர் விடைத்தாள்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் வைத்து தான் விடைத் தாள்களை பார்சல் வேனில் இருந்து மாற்றியுள்ளனர். விக்கிரவாண் டிக்கும் ஜெயக்குமார் உள்ளிட்ட குற்றவாளிகள் 3 பேரையும் காவல் துறையினர் அழைத்து சென்று விசா ரித்தனர். முக்கிய குற்றவாளி ஜெயக் குமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச் சத்துக்கு வந்துள்ளது. முறைகேடு கள் மூலம் வந்த பணத்தில் கோடிக் கணக்கான மதிப்புள்ள சொத்து களை வாங்கியுள்ளது தெரியவந் துள்ளது. சென்னை முகப்பேர் மற்றும் ஆவடியில் 3 வீடுகள் அவ ருக்கு சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. முறைகேடுகளை அரங்கேற்றுவதற்காக ஜெயக் குமார் சென்னை அண்ணாநகரில் ‘ஆல் சக்சஸ்’ என்ற பெயரில் தனி யாக அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஜெயக்குமாரிடம் நடக்கும் விசாரணை அடிப்படை யில் சில முக்கிய புள்ளிகள் கைதாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.