tamilnadu

img

ஊரடங்கால் வறுமை கோரத்தாண்டவம் புதுக்கோட்டையில் ஆட்டோ தொழிலாளி தற்கொலை ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை

புதுக்கோட்டை ஜூன் 26- பொது முடக்கம் ஏற்படுத்திய பாதிப்பால் குடும்ப வறுமையை தாங்க வழியின்றி புதுக்கோட்டை யில் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோ நிலையம் அருகி லேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை ஜீவா நகர் நாலாம் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(50). கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். சுப்பிரமணிக்கு பிரேமா என்ற மனைவியும் சோபனா என்ற கல்லூரி படிக்கும் மகளும் சூர்யா என்ற மகனும் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆட்டோக்களும் இயக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் வீட்டு வாடகை குடும்ப செலவுகள், ஆட்டோ வாங்கியதற்கான கடன் தொகை உள்ளிட்ட வற்றை சமாளிக்க முடியாமலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவிக்கு சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாமலும் சுப்பிரமணி கடும் மன உளைச்ச லுக்கு ஆளாகி உள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசு ஆட்டோ ஓட்ட அனுமதி அளித்தாலும் பயணிகளின் வரத்து இல்லாததால் வருமானம் முடக்கத்திலேயே தொடர்ந்தது. இது மேலும் அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தான் தொழில் செய்துவந்த ஆட்டோ ஸ்டாண்ட் அருகேயே உள்ள ஒரு கம்பியில் தூக்கிட்டு சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சக ஓட் ஆட்டோ ஓட்டுனர்களையும், அவர்களது குடும்பத் தினரையும் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் கூறியிருப்பது, கொரோனா ஊரடங்கால் ஆட்டோ, கட்டுமானம் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள் மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். வறுமையின் கோரப்பிடியை தாங்க முடியாமல்தான் சுப்பிரமணி தற்கொலை செய்துள்ளார். அனைத்து ஆட்டோ தொழிலாளர் களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டு மென சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது. இக்கோரிக்கை நிறைவேற்றப் பட்டிருந்தால் இத்தற்கொலை நடந்திருக்காது. எனவே, தமிழக அரசு அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் உடனடியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.