தெற்கு பிலிப்பைன்சில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
புவியியல் ரீதியாக செயல்படும் பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. உள்ளது.
தெற்கு பிலிப்பைன்சில் மத்திய மிண்டானாவோவை மையமாக கொண்ட பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது . இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. வீட்டில் இருந்தவர்களும் பள்ளி கூடங்களில் இருந்து மாணவ மாணவிகளும் அலறி அடித்துக்கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் துலுனனுக்கு வடகிழக்கில் 26 கிமீ தொலைவில் காலை 9:04 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டிடங்களுக்கு வெளியே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.