tamilnadu

img

இனி சூப்பர் மார்க்கெட்டிலும் பெட்ரோல், டீசல் விற்பனை!

புதுதில்லி:
சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள்,ஷாப்பிங் மால்களிலும் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு, அனுமதி வழங்குவது குறித்து, மத்திய பாஜக அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

பெட்ரோல் நிரப்புவதற்கான நிலையங்கள் போதுமானதாக இல்லாததால், வெகுதூரம் பயணிக்கவும் வரிசையில் காத்திருக்கவும் வேண்டியிருப்பதால், பொதுமக்களின் நலன்கருதி பெட்ரோலியத்துறை அமைச்சகம் இந்த திட்டத்தை கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக, தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் - டீசல் விற்பனையில் இறங்குவதற்கான விதிமுறைகளும் தளர்த்தப் படுகின்றன. அதாவது, அடிப்படை உள்கட்டமைப்புக்காக உள்நாட்டுச் சந்தையில் 2 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வது, 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் அல்லது அதற்கு ஈடான தொகைக்கு வங்கிஉத்தரவாதம் தருவது போன்ற விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. பொருளாதார நிபுணர் கிரித் பாரிக்தலைமையிலான கமிட்டி இதற்காகப் பரிந்துரை செய்துள்ள நிலையில், இதன்மூலம், பல்வேறு பிராண்டுகளை விற்பனைசெய்யும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல், ப்யூச்சர் குரூப் மற்றும் சவூதியின் அரம்கோ போன்றநிறுவனங்கள் விற்பனையில் இறங்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.