tamilnadu

img

14 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்....

சென்னை:
தமிழகத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஏழாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் கையெழுத்தாகியுள்ளன.

ஜெஎஸ்டபுள்யு, குழுமம், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம், ஐநாக்ஸ் நீர்ம ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் அதன் தொழில் திட்டங்களில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும். இதனால் புதிதாக ஏழாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.ஓசூரில் ஐநாக்ஸ் நீர்ம ஆக்சிஜன் நிறுவனமும், சென்னையை அடுத்த ஒரகடத்தில் அப்போலோ டயர்ஸ் நிறுவனமும் தொழிற்சாலைகளைத் தொடங்க உள்ளன.திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் தனது தொழிற் சாலையை நிறுவ உள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட  ஜெஎஸ்டபிள்யு குழுமம்தமிழகத்தின் 5 மாவட்டங்களில் காற்றாலை மற்றும்சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.