திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலராமநல்லூர் கிராமத்தில் மாடு மேய்க்க வயலுக்கு சென்ற ஜெய மணி(37) மின்கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். அவரோடு சேர்ந்து கறவை மாடும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது. அப்போது தனது மாட்டையும் தனது மனைவியை காணவில்லை என்று கணவர் பழனிச்சாமி வயலுக்கு சென்றபோது, கற வை மாடும் தன் மனைவியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தூத்தூர் காவல் நிலைய போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.