districts

மின்சாரம் தாக்கி பெண் பலி

 அம்பத்தூர், ஜூன் 10- திருமுல்லைவாயல் ஸ்ரீநகர் காலனி ஜான்சி ராணி தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் மனைவி பைரவி (34). ஜெகன்குமார், ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்கிறார். பைரவி, சென்ட்ரல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார்.  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பைரவி, புதன்கிழமை மாலை வீட்டில் துணி  துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மின்சார மோட்டாருக்கு  செல்லும் வயர் மீது பைரவியின் கை பட்டது. அந்த வயரில் மின்கசிவு  இருந்ததினால், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த பைரவியை, ஜெகன்குமாரும், அவரது மகன்களும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பைரவி ஏற்கெ னவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.