tamilnadu

img

பாதாள அறையில் தங்க வைக்கப்பட்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்த  பாதாள அறையில் ட்ரம்ப் தங்க வைக்கப்பட்டிருந்த தகவல் வெளியாகி உள்ளது. 
அமெரிக்காவில் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் காவல் துறையினரால் படு கொலை செய்யப்பட்டார்.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறன்று 40க்கும் அதிகமான நகர்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு  வெளியே நடந்த போராட்டத்தை கண்டு டிரம்ப் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள பாதாள அறையில் தங்க வைக்கப்பட்டார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகே ட்ரம்ப் மீண்டும் மேல் தளத்துக்கு அழைத்து வரப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.