அமெரிக்காவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அலஸ்கா கடலில் பேரலைகள் ஏற்படும். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.