சண்டிகர் ஹரியானா சட்ட மன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி ஏழு முக்கிய வாக்குறுதிகளை கொ டுத்துள்ளது.
முதியோர் உதவித்தொகை யாக ரூ. 6,000 வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படுவ துடன் 25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, குறைந்தபட்ச ஆதரவு விலைக் கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். கிரீமி லேயரின் வருமான வரம்பு ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப் படும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் வித வைகளுக்கு மாதாந்திர ஓய்வூ தியமாக ரூ. 6,000 வழங்கப் படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப் படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப் படும், ரூ. 25 லட்சம் வரை இல வச மருத்துவக் காப்பீடு வழங் கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்ட மன்றத்திற்கு அக்டோபர் 5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்கு கள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப் பட உள்ளன.
தில்லியில் உள்ள காங்கி ரஸ் தலைமையகத்தில் காங்கி ரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன் கார்கே இந்த தேர்தல் வாக்குறுதிகளை வெளி யிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய கார்கே, “இந்த 7 வாக்குறுதிகளை நாங்கள் செயல்படுத்துவோம். இந்த ஏழு வாக்குறுதிகளை தவிர்த்து, 53 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற் றுள்ள பிற வாக்குறுதிகள் குறித்து பின்னர் விரிவாக விளக்கப்படும் என்றும் தெரி வித்துள்ளார்.